ஜனவரி 5ல் சென்னை வி.ஜி.பி. திடலில் ஜெப மாநாடு: தமிழகத்தின் நலனுக்காக ஜெபம்
சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே உள்ள வி.ஜி.பி. திடலில் வரும் ஜனவரி மாதம் 5ம் தேதி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் ஜெப மாநாடு நடைபெறுகிறது.
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா அருகில் உள்ள வி.ஜி.பி.திடலில் வரும் ஜனவரி மாதம் 5ம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை தமிழகத்தின் ஆசீர்வாதங்களுக்காக 12 மணி நேர திறப்பின் வாசல் ஜெப மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாடு ஆயிரக்கணக்கான போதகர்கள் ஒரே மேடையில் நின்று தமிழ் நாட்டை ஆசீர்வதித்து ஜெபிக்கும் நேரமாகவும், கண்ணீருடன் ஜெபிக்கும் மன்றாட்டு நேரமாகவும், பல தேவ ஊழியர்களின் ஆழமான, அனலூட்டும் ஆவிக்குரிய தீர்க்கதரிசனச் செய்திகளாகவும் நடைபெற உள்ளது.
இந்த திறப்பின் வாசல் ஜெப மாநாட்டில் சகோ.மோகன்.சி.லாசரஸ், பாதிரியார் மோகன், அப்பாத்துரை, பேட்ரிக் ஜோஷ்வா, வின்சென்ட் செல்வக்குமார் ஆகியோர் தேவசெய்தி கொடுக்கின்றனர்.












Click it and Unblock the Notifications