பெண்களுக்கான முதல் சுய இன்ப 'பார்'.. ஜப்பானில் திறப்பு!
டோக்கியோவின் ஷிபுயா என்ற இடத்தில் இந்த பார் திறக்கப்பட்டுள்ளது. இந்த பாரில் முற்றிலும் செக்ஸ் தொடர்பானவைதான் உள்ளன. சுவர்களைக் கூட செக்ஸ் பொம்மைகளைக் கொண்டு அலங்கரித்துள்ளனர்.
பாரின் உரிமையாளரான மெகுமி நககவா கூறுகையில், வைப்ரேட்டர் உள்ளிட்டவை எங்களது சுவரை அலங்கரித்துள்ளன. இவற்றையெல்லாம் பார்க்கும் பெண்களுக்கு செக்ஸ் மீதும், தங்கள் மீதும் நம்பி்க்கை பெருகும்.
மேலும் சுய இன்பப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலான விவாதங்களும் இங்கு நடைபெறுகிறது. பெண்கள் அனைவரும் ஒரே இடத்தில் குழுமி சுய இன்பப் பழக்கம் குறித்து இங்கு விவாதிக்கலாம். தங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளலாம். தகவல்களையும் பரிமாறிக் கொள்ளலாம்.
பெண்களின் சுய இன்பப் பழக்கம் தவறானது என்பது போலப் பேசுகிறார்கள். அது தவறானது என்பதை நிரூபிக்கவே இந்த பாரில் சுய இன்பப் பழக்கத்திற்கு முக்கியத்துவம் தருகிறோம் என்றார்.