திருத்தங்களுடன் கூடிய லோக்பால் மசோதாவுக்கு கேபினட் ஒப்புதல்
Subscribe to Oneindia Tamil

லோக்பால் மசோதா லோக்சபாவில் கடந்த ஆண்டு இறுதியில் நிறைவேற்றப்பட்டது.. ஆனால் அரசுக்குப் பெரும்பான்மை இல்லாததால் ராஜ்யசபாவில் இந்த மசோதா நிறைவேறவில்லை.
இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ள ராஜ்யசபா தேர்வுக் குழுவுக்கு லோக்பால் மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. அக்குழுவும் தனது திருத்தங்களை கடந்த மாதம் ராஜ்யசபாவில் தாக்கல் செய்தது. 'மாநிலங்கள் லோக்பால் அமைப்பு தேவை என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் மட்டுமே அது நடைமுறைக்கு வரும். நிபந்தனைகளுடன் பிரதமரும் லோக்பால் வரம்புக்குள் சேர்க்கப்படுவர்' என்பது உள்ளிட்ட திருத்தங்களுடன் ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த திருத்தங்களுடன் கூடிய லோக்பால் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் கொடுத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications