காவிரி: சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தேவே கவுடா மிரட்டல்
Subscribe to Oneindia Tamil

பெங்களூரில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய அவர், காவிரி நதிநீர் ஆணையத்தின் தலைவரான பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திக்க அனுமதி கோரியிருக்கிறேன். அவரிடம் மாநில நீர் நிலவரம் குறித்து விவரிக்க இருக்கிறேன். இதேபோல் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஹரீஷ் ராவத்திடமும் பேச இருக்கிறேன்.
இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க லோக்சபாவில் 4 முறை நோட்டீஸ் கொடுத்துவிட்டேன். ஒருமுறை இந்த விவகாரம் தொடர்பாக பேச எனக்கு அனுமதி கொடுத்தனர். ஆனால் தமிழக எம்.பிக்கள் என்னை பேசவிடவில்லை.
காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடகத்துக்கான நியாயத்தை மாநில அரசு பெற்றுத் தராவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பேன் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications