காவிரி: சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தேவே கவுடா மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

Deve Gowda
பெங்களூர்: காவிரி நதி நீர் விவகாரத்தில் கர்நாடகத்துக்கு நியாயத்தைப் பெற்றுத்தர மாநில அரசு தவறினால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவேன் என்று முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான தேவே கவுடா மிரட்டியிருக்கிறார்.

பெங்களூரில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய அவர், காவிரி நதிநீர் ஆணையத்தின் தலைவரான பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திக்க அனுமதி கோரியிருக்கிறேன். அவரிடம் மாநில நீர் நிலவரம் குறித்து விவரிக்க இருக்கிறேன். இதேபோல் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஹரீஷ் ராவத்திடமும் பேச இருக்கிறேன்.

இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க லோக்சபாவில் 4 முறை நோட்டீஸ் கொடுத்துவிட்டேன். ஒருமுறை இந்த விவகாரம் தொடர்பாக பேச எனக்கு அனுமதி கொடுத்தனர். ஆனால் தமிழக எம்.பிக்கள் என்னை பேசவிடவில்லை.

காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடகத்துக்கான நியாயத்தை மாநில அரசு பெற்றுத் தராவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பேன் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+