வைகோ நிகழ்ச்சிக்கு வரவில்லை வடிவேலு... தொண்டர்கள் ஏமாற்றம்!

கடந்த 2011ல் நடந்த சட்டசபைத் தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்தை கடுமையாக சாடினார். இந்த பிரச்சாரத்தை வேடிக்கைப் பார்க்க மக்கள் எக்கச்சக்கமாக திரண்டனர்.
ஆனால் தேர்தலில் திமுக தோற்றது. வடிவேலு சினிமாவிருந்து ஓரங்கட்டப்பட்டார்.
இதற்கிடையே, எதிர் எதிர் துருவமாக இருந்த தி.மு.க. - தே.மு.தி.க., ஒரே அணியில் வர வாய்ப்புள்ளதாக வெளியான தகவல், வடிவேலுவை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இந்நிலையில், திடீர் திருப்பமாக நடிகர் வடிவேலு, நேற்று ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ முன்னிலையில் திருச்சியில் நடைபெற்ற ''நாடாளுமன்றத்தில் வைகோ'' என்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து வைகோ கட்சியில் வடிவேலு இணைகிறார் என்று பேசப்பட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று வடிவேலுவின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
ஆனால் எதிர்பார்த்தபடி வடிவேலு இந்த விழாவிற்கு வரவில்லை. இதனால் வைகோ கட்சியில் வடிவேலு இணைவதாக பேசப்பட்ட செய்தி பொய்யாகி, மதிமுக தொண்டர்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications