காலையில் வால்மார்ட் - பிற்பகலில் இடஒதுக்கீடு: தொடர் அமளியால் ராஜ்யசபா முடக்கம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் நுழைய ரூ125 கோடி செலவிட்டதாக வால்மார்ட் நிறுவனம் தெரிவித்திருக்கும் விவகாரத்தாலும் பதவி உயர்வில் இடஒதுக்கீடு கோரும் விவகாரத்தாலும் ராஜ்யசபா இன்று முடங்கிப் போனது.

வால்மார்ட் விவகாரம்

இந்தியாவில் நுழைவதற்காக ரூ125 கோடி செலவு செய்ததாக வால்மார்ட் நிறுவனம் தெரிவித்திருந்தது. இன்று காலை ராஜ்யசபா கூடியதும் அதிமுக, மார்க்சிஸ்ட் கட்சி, சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அசாம் கனபரிஷத் ஆகிய கட்சிகளின் எம்.பிக்கள் இந்த விவகாரத்தை எழுப்பியதால் பெரும் அமளி ஏற்பட்டு அவை நடவடிக்கைகள் பாதிகக்ப்பட்டன.

பின்னர் ஜீரோ நேரத்தின் போது பேசிய பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் இந்த விவகாரத்தை எழுப்பினார். "வால்மார்ட் இப்படி ஒரு கருத்து தெரிவித்திருக்கும் நிலையில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கும் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும். இது தொடர்பாக விசாரணை நடத்துவதுடன் அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

ரவிசங்கர் பிரசாத்தின் கருத்தை திரிணாமுல் காங்கிரஸின் பந்தோபாத்யா ஆதரித்துப் பேசினார். இதேபோல் மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி ராஜீவ், இந்த லஞ்ச விவகாரம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதனால் அவை நடவடிக்கைகள் காலையில் முடங்கின.

இடஒதுக்கீடு மசோதா தாக்கல்

பிற்பகலில் அவை கூடிய போது ஆதிதிராவிடர் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை இணை அமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார். ஆனால் இதற்கு சமாஜ்வாடி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை நடவடிக்கைகள் பாதிப்புக்குள்ளானது. பின்னர் ராஜ்யசபா நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+