வாக்கு வங்கி அரசியல் செய்வதைத் தவிர வேறு எதுவும் தெரியாத மன்மோகன்சிங்: நரேந்திர மோடி

Subscribe to Oneindia Tamil

வல்சாத்: சிறுபான்மையினரைக் குறிவைத்து வாக்கு வங்கி அரசியல் நடத்துகிறார் பிரதமர் மன்மோகன்சிங் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பதிலடி கொடுத்திருக்கிறார்.

குஜராத் மாநில சட்டசபை தேர்தலுக்கான பிரச்சார களம் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. வான்சதா என்ற இடத்தில் பிரச்சாரம் செய்த பிரதமர் மன்மோகன்சிங், குஜராத் மாநில அரசைக் கடுமையாக சாடினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வல்சாத் என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதல்வர் நரேந்திர மோடி, சிறுபான்மையினர்- பெரும்பான்மையினர் எனப் பிரித்து வைத்து மன்மோகன்சிங் வாக்கு வங்கி அரசியல் நடத்துகிறார். இந்த வாக்கு வங்கி அரசியலைத்தாண்டி பிரதமரால் செயல்பட முடியவில்லை என்பது வருத்தம் தரக்கூடியது. குஜராத் மாநில அரசைப் பொறுத்தவரையில் 6 கோடி மக்களுக்காகவுமே பாடுபடுகிறது.

ராஜ்யசபாவுக்கு மன்மோகன்சிங் தேர்வு செய்யப்பட்டிருக்கும் அசாமில்தான் நாடே அதிரும் வகையிலான இனக்கலவரம் நடைபெற்றது. குஜராத்தில் கடந்த 11 ஆண்டுகளில் ஒரு இனக்கலவரம் கூட நடைபெறவில்லை. மாநிலத்தின் சகோதரத்துவ சூழ்நிலையை கெடுக்கிறார் மன்மோகன்சிங் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+