கட்சி துவங்கிய சூட்டோடு ஜாமீன் பெற்ற எதியூரப்பா அன்ட் கோ

Subscribe to Oneindia Tamil

Yeddyurappa
பெங்களூர்: சுரங்க முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கர்நாடக முன்னாள் முதல்வரும், கர்நாடக ஜனதா கட்சியின் தலைவருமான எதியூரப்பாவுக்கு சிபிஐ நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.

சுரங்க முறைகேடு வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வரும், கர்நாடக ஜனதா கட்சியின் தலைவருமான எதியூரப்பா, அவரது மகன்கள் ராகவேந்திரா, விஜயேந்திரா, மருமகன் ஆர். என். சோஹன் குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு பெங்களூரில் உள்ள சிபிஐ நீதி்மன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் ஜாமீன் கோரி எதியூரப்பா, அவரது மகன்கள், மருமகன், முன்னாள் அமைச்சர் கிருஷ்ணைய்யா செட்டி மற்றும் 8 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி எதியூரப்பா, அவரது மகன்கள், மருமகன் மற்றும் 9 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ஆனால் அவர்கள் அனைவரும் வழக்கு விசாரணைக்கு ஒழுங்காக ஆஜராக வேண்டும், சாட்சியங்களை கலைக்கக் கூடாது, அனுமதியின்றி நாட்டை விட்டு போகக் கூடாது மற்றும் பாஸ்போர்ட்டுகளை ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு குறித்த போலீஸ் விசாரணை ஏற்கனவே முடிந்துவிட்டதால் அவர்களால் சாட்சியங்களை கலைக்க முடியாது என்பதால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

பாஜகவில் இருந்து வெளியேறிய எதியூரப்பா நேற்று தான் கர்நாடக ஜனதா கட்சியைத் துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+