28ம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 28ம் தேதி சென்னையில் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுக்குழு வருகிற 28ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10 மணிக்கு சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் கழக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும்.
கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மின் வெட்டு பிரச்சனை குறி்த்து ஆலோசிக்க திமுக செயற்குழு வரும் 13ம் தேதி கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications