தேர்தலில் "போட்டி"யிடுகிறாராம் அன்புமணி! மாமனார் தொகுதியில் கனஜோரில் பணிகள்!

தேர்தலில் போட்டியிடாமலேயே கூட்டணிக் கட்சியின் தயவில் ராஜ்யசபா 'எம்.பி'யாகி அமைச்சரானவர் அன்புமணி.
இனிவரும் தேர்தலில் "திராவிட" கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்டு "சாதிய" கட்சிகளுடன்தான் கூட்டணி என்று பகிரங்கமாக அறிவித்து பேசி வருகிறார் ராமதாஸ். இந்த "சாதிய" கட்சிகள், அன்புமணியை ராஜ்யசபாவாக்கும் தகுதி படைத்தவை இல்லை. இதனால் வேறுவழியே இல்லாமல் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டாக வேண்டிய நிலையில் இருக்கிறார் அன்புமணி.
இதற்காக எந்தத் தொகுதியை குறிவைக்கலாம் என ஆலோசனை நடத்தியதில் மிகவும் 'பாதுகாப்பான' 'நம்பிக்கையான' தொகுதி என அன்புமணி முடிவு செய்திருப்பது தமது மாமனார் கிருஷ்ணசாமி எம்.பியாக இருக்கும் ஆரணி தொகுதியைத்தானாம்!
ஆரணியில் வன்னியர்கள் அதிகம் இருக்கின்றனர் என்பதாலும் மாமனார் தொகுதி என்பதாலும் எப்படியும் கரையேறிவிடலாம் என்ற கனவில் ஆரணியில் போட்டியிட தீர்மானித்திருக்கிறார் அன்புமணி!
இதற்காக வன்னியர் சங்கத் தலைவரான குரு கடந்த சில நாட்களாக ஒவ்வொரு கிராமமாக சென்று பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதேபோல் சேவூர் அருகே இ.பி. நகரில் இருக்கும் மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் குமாரின் வீட்டில் தினமும் பாமகவினர் கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மாமனாருக்கு பொலிட்டிக்கல் ரிட்டயர்மெண்ட் கொடுத்துட்டாரோ அன்புமணி?












Click it and Unblock the Notifications