கூடங்குளம்: நடுக்கடலில் முற்றுகைப் போராட்டம்! சாகவும் தயார்- சுப. உதயகுமார்!

கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி இன்று கடல்வழியாக மீண்டும் அணுஉலையை முற்றுகையிடப்போவதாக கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.. இதைத் தொடர்ந்து இன்று காலை 10 மணியளவில் இடிந்தகரை கிராமத்தில் இருந்து நூற்றுக்கணக்கான படகுகளுடன் கடல் வழியே அணு மின்நிலையத்தை முற்றுகையிட போராட்டக் குழுவினர் புறப்பட்டுச் சென்றனர். பின்னர் நடுக்கடலில் நின்றபடி கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
சாகவும் தயார்...: உதயகுமார்
போராட்டத்துக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார்,
கூடங்குளம் அணு உலை தொடர்பான உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு இன்னும் வரவில்லை மக்களின் உணர்வுகளை மத்திய, மாநில அரசுகள் மதிக்கவில்லை. மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. அணுக்கழிவை என்ன செய்யப்போகிறீர்கள்? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
ஆனால் மத்திய அரசோ உரிய பதிலைத் தரவில்லை. கர்நாடகாவில் எந்த இடத்திலும் அணுக்கழிவை வைக்க அனுமதிக்கமாட்டோம் என அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். அவர்களை மத்திய அரசு மதிக்கிறது. கர்நாடகாவில் அணுமின் திட்டம் அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கியதும் அத்திட்டம் கைவிடப்பட்டது.
தமிழர்களை மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மையில் நடத்துகிறது.
எங்களை தேசத்துரோகி எனக்கூறும் பா.ஜ.க.வினர், அணுமின்நிலையத்தை எதிர்க்கும் கர்நாடக முதல்வரை தேச துரோகி என்று கூறுவார்களா?.
தமிழக இயற்கை வளத்தை ரஷ்யாவிற்கு வழங்க அனுமதிக்கமாட்டோம். உயிரை கொடுத்தாவது இயற்கை வளத்தை காப்போம். கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து நாங்கள் சாகவும் தயாராக இருக்கிறோம் என்றார் அவர்.
பிற இடங்களில்...
இடிந்தகரை போராட்டத்துக்கு ஆதரவாக கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தினர்.
இதேபோல் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டக் குழுவினர் மறியல் போராட்டம் நடத்தினர்
இன்றைய போராட்டத்தில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க ஆயிரக்கணக்கான போலீசார் கூடங்குளத்தில் குவிக்கப்பட்டிருக்கின்றனர். போராட்டக் குழுவினர் அணுமின் நிலையத்துக்குள் நுழைந்துவிடாமல் தடுக்க மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரும் அங்கு உஷார்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
கடந்த அக்டோபர் மாதமும் இதேபோல் நடுக்கடலில் நின்றபடி முற்றுகைப் போராட்டம் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications