கிரானைட் கொள்ளை: 'தலைமறைவு' துரைதயாநிதிக்கு ஒருவழியாக முன்ஜாமீன்!

மதுரை சுற்றுவட்டாரத்தில் அனுமதித்த அளவைவிட கூடுதலாக கிரானைட் கற்களை வெட்டியெடுத்து சட்டவிரோதமாக பல்லாயிரம் கோடி ரூபாயை சுருட்டிய நிறுவனங்களில் ஒலிம்பஸ் நிறுவனமும் அடங்கும்.
இந்த ஒலிம்பஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவராக இருந்தவர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி. கிரானைட் கொள்ளை வழக்கில் சிலர் சிக்கிக் கொள்ள துரைதயாநிதி உட்பட பலர் பல மாதங்களாக தலைமறைவாகிவிட்டனர். இவர்களுக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
துரைதயாநிதியை எப்படியாவது மடக்கிப் பிடிக்க தனிப்படை போலீஸார் தீவிரம் காட்டினர். இதற்காக அவரது மனைவி, மைத்துனர்கள் உட்பட பலரையும் மதுரைக்கு வரவழைத்து கிடுக்குப்பிடி விசாரணையும் நடத்தப்பட்டது. ஆனாலும் பலன் கிடைக்கவில்லை.
இந்நிலையில் துரைதயாநிதியின் முன் ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீனை வழங்கியிருக்கிறது.
இந்த வழக்கில் துரைதயாநிதி உள்ளிட்ட 10 பேருக்கும் முன்ஜாமீன் கிடைத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து இவர்கள் மீது வழக்கு பதிவாகியிருக்கும் காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும்.
அதாவது நாளை காலை முதல் திமுகவின் வழக்கறிஞர்கள் புடைசூழ தலைமறைவு துரைதயாநிதி காவல்நிலையத்தில் கையெழுத்து போடக் கிளம்புவார்.












Click it and Unblock the Notifications