திருச்சியில் கழுத்தை அறுத்து வாலிபர் கொலை

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சியில் வாலிபர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் மர்மமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி சத்திரம் பேருந்துநிலையம் அருகே உள்ள காலி இடத்தில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதனைக் கண்ட சிலர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த மலைக்கோட்டை உதவி போலீஸ் கமிஷனர் சேகர், உள்ளிட்ட போலீசார் அங்கு வந்து சோதனை மேற்கொண்டனர்.

கொலை செய்யப்பட்ட வாலிபர் கருப்பு கலர் பேண்டு, 'டி' சர்ட் அணிந்திருந்தார். கழுத்து கத்தியால் அறுக்கப்பட்டிருந்தது. வயிற்றில் கத்தியால் குத்தியதில் குடல் சரிந்து இருந்தது. கையில் ஒரு கட்டையை பிடித்திருந்தபடி அவர் பிணமாக கிடந்தார். அவரது சட்டை பையில் ஒரு ஏ.டி.எம். கார்டும், அதில் பாண்டி என்ற பெயரும் எழுதப்பட்டு இருந்தாக போலீசார் தெரிவித்தனர்.

இறந்து போன பாண்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. அவரது சட்டை பையில் இருந்த ஏ.டி.எம். கார்டை வங்கியில் கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் தகவலை வைத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் கொலையாளிகள் யார் என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மதுபோதையில் தகராறு ஏற்பட்டு கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சியின் முக்கியப்பகுதியில் நடந்த கொலை அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரத்தில் கொலை

இதேபோல் ராமநாதபுரம் தெற்குத்தெருவயல் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (25), என்ற கட்டடத்தொழிலாளி அவரது உறவினரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். தேவிப்பட்டிணம் செல்லும் சாலையில் உள்ள டீக்கடையில் சக்திவேல் டீ குடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த அவரது உறவினர் கணேசன் அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். இதனையடுத்து போலீசார் கணேசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+