மாண்டலின் ஸ்ரீநிவாசுக்கு விவாகரத்து: மனைவிக்கு ரூ.50 லட்சம் ஜீவனாம்சம் தர உத்தரவு

ஐஏஎஸ் அதிகாரியின் மகளான ஸ்ரீ என்பவரை 1994ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி மாண்டலின் ஸ்ரீநிவாஸ் திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டு ஸ்ரீ தனது மகனுடன் 16 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வருகிறார்.இது தொடர்பாக குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அங்கு ஸ்ரீநிவாஸுக்கு விவாகரத்து வழங்கப்பட்டது. அதை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
இந்நிலையில் இதை எதிர்த்து ஸ்ரீ உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தார்.இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளதாவது:
ஸ்ரீநிவாஸ் தரப்பில், மனரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் அவர் பிரபலமானவர் என்ற நிலையில், அவரது புகழை கெடுக்கும் வகையில் மனைவி நடந்து கொண்டுள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.எனவே ஸ்ரீநிவாஸுக்கு விவாகரத்து வழங்கப்படுகிறது. இருப்பினும் அவரது மனைவி, தனது மகனுடன் சமூகத்தில் மதிப்புடன் வாழ அவருக்கு ரூ.50 லட்சம் ஜீவனாம்சம் 4 மாதத்துக்குள் வழங்க வேண்டும். இதில் ரூ.20 லட்சத்தை நிரந்தர வைப்பு நிதியாக வங்கியில் செலுத்த வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications