எல்டிடிஇ பற்றி இனி சம்பந்தன் பேசக்கூடாது!.... புலிகள் எச்சரிக்கை
கொழும்பு: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இனி புலிகளைப் பற்றி பேசக்கூடாது. மீறிப் பேசினால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று வெளிநாட்டில் உள்ள விடுதலைப்புலிகள் இயக்க பிரிவு ஒன்று எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், புலிகள் தங்களாகவே தங்களை அழித்துக் கொண்டார்கள் என இலங்கை நாடாளுமன்றத்தில் பேசும்போது தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, வெளிநாட்டில் உள்ள விடுதலைப் புலிகள் நெடியவன் பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களில், சம்பந்தனை மிகவும் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் கடந்த வாரம், துரோகிகள் பட்டியலிலும் சம்பந்தன் இணைக்கப்பட்டார்.
இந்த நிலையில், விடுதலைப் புலிகள் பற்றி பேசுவதற்கு சம்பந்தனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. "இரா.சம்பந்தன் இனி விடுதலைப்புலிகள் இயக்கம் பற்றி வாய் திறந்தால், விளைவுகள் மோசமாக இருக்கும் எனவும், அவர் இந்தியா தவிர்ந்த எந்த ஒரு வெளிநாடு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தடை விதிக்கப்பட்ட விபரம், விடுதலைப் புலிகள் நெடியவன் அணியுடன் நெருக்கமாக கூட்டமைப்பு எம்.பி. ஒருவர் மூலமாக, இரா.சம்பந்தனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், தெரியவருகிறது.












Click it and Unblock the Notifications