ஓசூர் அரசு மருத்துவமனையில் அதிசயம்: 12.12.12ல் 12 குழந்தைகள் பிறப்பு

Subscribe to Oneindia Tamil

Babies
ஓசூர்: 12.12.12 என்ற அபூர்வ நாளான நேற்று ஓசூர் அரசு மருத்துவமனையில் 12 குழந்தைகள் பிறந்துள்ளன.

12.12.12 என்ற அபூர்வ நாளான நேற்று உலகம் முழுவதும் ஏராளமான ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர். மேலும் கர்ப்பமாக உள்ள பலர் தங்கள் குழந்தை இந்த ஆபூர்வ நாளில் பிறக்க வேண்டும் என்று விரும்பினர். இதற்கு தமிழக தாய்மார்கள் மட்டும் என்ன விதிவிலக்கா.

இந்நிலையில் நேற்று ஓசூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 கர்ப்பிணிகள் குழந்தைகளை பெற்றெடுத்தனர். 12.12.12 அன்று 12 குழந்தைகள் அதுவும் ஒரே மருத்துவமனையில் பிறந்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. 12 குழந்தைகளில் 7 ஆண் மற்றும் 5 பெண் குழந்தைகள் அடக்கம்.

ஓசூர் ஆவலப்பள்ளியைச் சேர்ந்த ரமேஷ், ரேணுகா தம்பதி, அஞ்செட்டி தர்மன்-மம்தா தம்பதி உள்ளிட்ட 7 தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. மேலும் கொத்தபேலூர் சிபு-நாகம்மா தம்பதி உள்பட 5 தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்தது.

உலகின் பல்வேறு பகுதிகளில் தங்கள் குழந்தைகள் 12.12.12 என்ற அதிசய நாளில் பிறக்க வேண்டும் என்பதற்காக கர்ப்பிணிகள் சிசேரியன் செய்து கொண்ட சம்பவங்களும் நடநத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+