மின்வெட்டு: லேட்டாக களம் இறங்கும் திமுக! டிச. 18ல் அறப்போராட்டம்!
சென்னை: தமிழகத்தில் நீடித்து வரும் தொடர் மின்வெட்டைக் கண்டித்து டிசம்பர் 18-ந் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் அறப்போராட்டங்களை நடத்த திமுக செயற்குழு முடிவு செய்திருக்கிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திமுக செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. மின்வெட்டு பற்றி விவாதிக்க மட்டுமே இந்த செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மின்வெட்டு பிரச்சனையால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு கருணாநிதி உத்தரவிட்டிருந்தார். இந்த அறிக்கைகளின் அடிப்படையில் டிசம்பர் 18-ந் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அறப்போராட்டம் நடத்தப்படும் என்று செயற்குழுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications