தூக்கில் தொங்கிய வாலிபர்: கள்ளத் தொடர்பால் கொலையா?...
அரியலூர்: அரியலூர் அருகே வாலிபர் ஒருவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளத்தொடர்பு காரணமாக அவர் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அரியலூர் மாவட்டம் சின்னகருக்கை கிராமத்தை சேர்ந்தவர் சிவசாமி (வயது 27). இவருக்கும் திட்டக்குடி அருகே உள்ள அய்யலூர் கிராமத்தை சேர்ந்த மகாதேவி என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சரண்யா (8), அய்யப்பன் (6) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
சிவசாமிக்கு அந்த ஊரில் உள்ள சில பெண்களுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்படவே சிவசாமி தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் ஊரை காலி செய்து விட்டு மாமியார் வீட்டுக்கு சென்று வசித்து வந்தார்.
இந்தநிலையில் 2 நாட்களுக்கு முன்பு சிவசாமி சொந்த ஊரான சின்ன கருக்கை கிராமத்திற்கு சென்று வருவதாக மனைவியிடம் கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் சின்னகருக்கை கிராமத்தில் முனியப்பன் கோவில் அருகே உள்ள காட்டுப்பகு தியில் சிவசாமி மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார். இதுகுறித்து சிவசாமியின் அண்ணன் ஆனந்தராஜ் என்பவர் தம்பியின் சாவில் மர்மம் இருப்பதாக ஆண்டிமடம் போலீசில் புகார் தெரிவிக்கவே, போலீசார் சிவசாமியின் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிவசாமி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கள்ளத்தொடர்பு தகராறில் மர்ம நபர்களால் கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications