For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தலித் நபர் தற்கொலை வழக்கு... முன்ஜாமீன் கோருகிறார் ஓ.பன்னீர்செல்வம் தம்பி

Google Oneindia Tamil News

மதுரை: தலித் நபர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா மனு செய்துள்ளார்.

தேனி மாவட்டம் டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த தலித் நபர் நாகமுத்து என்பவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தன்னைத் தற்கொலைக்கு தூண்டியதாக, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரும், பெரியகுளம் நகராட்சி தலைவருமான, ஓ.ராஜா, மணிமாறன் உட்பட சிலர் மீது அவர் குற்றம் சாட்டி கடிதம் எழுதி வைத்திருந்தார். இதையடுத்து தென்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து மணிமாறன் மதுரையில் கோர்ட்டில் சரணடைந்தார். இந்த நிலையில் ராஜாவும், மற்றவர்களும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முன்ஜாமீன் கோரி மனு செய்துள்ளனர். அதில் அரசியல் காரணங்களுக்காக வழக்குப் பதிவு செய்துள்ளனர். முன்ஜாமின் வழங்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

English summary
O.Raja, brother of Minister O Pannerselvam has sought advance bail in a suicde case near Theni.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X