ஜெ. தலைமையில் தொடங்கியது கலெக்டர்கள், எஸ்.பிக்கள் மாநாடு
சென்னை: முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு சென்னையில் தொடங்கியது.
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து விவாதிக்கவும், அரசு திட்டங்கள் நிறைவேற்றப்படுவதை திறனாய்வு செய்யவும், மக்களின் தேவைக்கேற்ப திட்டங்களில் மாற்றம் தேவையா? என்பது பற்றி ஆலோசிக்கவும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாட்டினை நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு இருந்தார்.
அதன்படி, ஜெயலலிதா தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடியில் உள்ள கூட்டரங்கில் இன்று காலை 10 மணியளவில் தொடங்குகியது.
முதலில் கூட்டு கூட்டம்
இன்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஒருங்கிணைந்த மாநாடு நடைபெறுகிறது. ஜெயலலிதா, மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினார்.
இதையடுத்து நாளை 18ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சித் தலைர்கள் மாநாடும், 19ம் தேதி போலீஸ் அதிகாரிகள் மாநாடும் நடைபெறுகிறது.
மாநாட்டில், அமைச்சர்கள், அரசு தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., அரசுத்துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள், எஸ்.பிக்கள் கலந்து கொள்கின்றனர். மாநாட்டின் நிறைவில், தமிழ்நாட்டில் சிறப்பாக பணியாற்றிய ஆட்சித் தலைவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா கேடயம் வழங்குகிறார்.












Click it and Unblock the Notifications