தொடர்ந்து பாயும் என்.எஸ்.ஏ! கலக்கத்தில் ராமதாஸ் உள்ளிட்ட சாதி சங்கத் தலைவர்கள்!!
சென்னை: மறத்தமிழர் சேனை என்ற சாதி அமைப்பின் நிறுவனர் புதுமலர் பிரபாகரனை தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது.
தென்மாவட்டங்களில் மருதுபாண்டியர் குருபூஜை, தேவர் பூஜையை ஒட்டி படுகொலைகளும் வன்முறை சம்பவங்களும் நடந்தன. இதைத் தொடர்ந்து தேவர்குலக் கூட்டமைப்பின் தலைவராக சண்முகையா பாண்டியன் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் தேசப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இதேபோல் மறத் தமிழர் சேனை என்ற அமைப்பின் நிறுவனரான புதுமலர் பிரபாகரன் என்பவரும் கைது செய்யப்பட்டிருந்தார். தற்போது அவர் தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
சென்னையில் இன்று நடைபெற்ற கலெக்டர்கள் மாநாட்டில் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஜாதி மோதல்களுக்கு இடம் கொடுக்க மாட்டோம் என்று கூறியிருந்தார். மேலும் சாதியத் தலைவர்களை தேசப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தும் வருகிறார்.
இந்நிலையில் சாதிச் சங்கங்களை ஒன்றிணைத்து தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் சாதிய அமைப்புகளை ஒன்று திரட்டி தலித் மக்களுக்கு எதிராக பகிரங்கமாக கருத்துகளைக் கூறி வரும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ், கொங்குவேளாளக் கவுண்டர் பேரவையின் பொங்கலூர் மணிகண்டன் போன்றோர் மீதும் தேசப் பாதுகாப்பு சட்டங்கள் வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications