இந்திய நர்ஸ் தற்கொலைக்கு நான் தான் காரணம்: புலம்பும் கேட் மிடில்டன்

கர்ப்பமாக உள்ள இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டன் கிங் எட்வர்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்றார். அப்போது அந்த மருத்துவமனையில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி நர்ஸ் ஜெசிந்தா சால்டானா(46) ரிஷப்ஷனில் இருந்தார். அப்போது 2 பேர் போன் செய்து தாங்கள் இங்கிலந்து ராணி எலிசபெத் மற்றும் இளவரசர் சார்லஸ் என்று கூறி கேட்டுக்கு அளிக்கும் சிகிச்சை பற்றி கேட்டனர். அவர்கள் நிஜமாகவே ராஜ குடும்பத்தினர் என்று நினைத்த ஜெசிந்தா போனை கேட்டுக்கு சிகி்ச்சை அளித்த நர்ஸிடம் கொடுத்தார். அவரும் சிகிச்சை விவரங்களை அவர்களிடம் தெரிவித்தார். ஆனால் போனில் பேசியவர்கள் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரேடியோ ஜாக்கிகள்.
இதையடுத்து ஜெசிந்தா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாகும் முன்பு தான் எழுதிய வைத்த கடிதத்தில் தன் முடிவுக்கு ஆஸ்திரலிய ரேடியோ ஜாக்கிகள் தான் காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளதாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் ஜெசிந்தாவின் மரணத்திற்கு தான் தான் காரணம் என்று கேட் மிடில்டன் புலம்புகிறாராம். தான் மட்டும் அந்த மருத்துவமனைக்கு சிகிச்சை பெற செல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் ஜெசிந்தா இறந்திருக்க மாட்டாரே என்று அவர் புலம்பித் தள்ளுகிறாராம். நர்ஸ் மரணத்திற்கு நீ காரணம் இல்லை என்று இளவரசர் வில்லியம்ஸ் கேட்டை சமாதானப்படுத்தி வருகிறாராம்.












Click it and Unblock the Notifications