சிவாஜி பூங்காவை கபளீகரம் செய்ய முடியாமல் வெளியேறியது சிவசேனா!

கடந்த மாதம் 17-ந் தேதி காலமான சிவசேனா தலைவர் பால்தாக்கரேவின் உடல் சிவாஜி பூங்காவில் தகனம் செய்யப்பட்டது. பின் அந்த இடத்தின் அருகே பந்தல் ஒன்றை அமைத்து பால்தாக்கரே புகைப்படத்தையும் வைத்து நினைவிடமாக்க சிவசேனா முயன்று வந்தனர்.இந்த தற்காலிக நினைவகத்துக்காக நாள்தோறும் நூற்றுக்கணக்கான சிவசேனா தொண்டர்கள் சிவாஜி பூங்காவுக்கு வருவதும் முழக்கங்களை எழுப்புவதும் குப்பைகளை அங்கேயே போடுவதுமென பாடாய்படுத்திவந்தனர்.
இதே இடத்தில் பால்தாக்கரேவுக்கு நினைவகம் அமைக்கப் போவதாகவும் சிவசேனா அறிவித்தது. ஆனால் இதற்கு மகாராஷ்டிரா அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதே போல் மும்பை மாநாகராட்சியும் பால்தாக்கரே நினைவகத்தை அகற்றுமாறு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில், சிவாஜி பூங்காவில் இருந்து நினைவகம் அகற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் நேற்று நள்ளிரவு சிவாஜி பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த பால்தாக்கரேவின் தற்காலிக நினைவிடத்தை அகற்றப்பட்டது அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இப்பணிகள் நடைபெற்று முடிந்திருக்கிறது!












Click it and Unblock the Notifications