அருப்புக்கோட்டையில் 'பயங்கரம்'...அதிமுக நிர்வாகியை கடித்து காயப்படுத்திய திமுக நிர்வாகி!

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: அருப்புக்கோட்டையில் அதிமுக நிர்வாகியை கடித்து காயப்படுத்திய திமுக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள வேலாயுதபுரத்தைச் சேர்ந்தவர் சிவசங்கரன்(48). அதிமுக தொகுதி செயலாளர். அதே பகுதியில் உள்ள புன்னைவனம் தெருவைச் சேர்ந்தவர் குருமாணிக்கம்(40). திமுகவைச் சேர்ந்தவர். குருமாணிக்கம் சிவசங்கரனைப் பற்றி பிட் நோட்டீஸ் அடுத்து அதை வீடு வீடாகச் சென்று கொடுத்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த சிவசங்கரன் குருமாணிக்கத்தைப் பார்த்து ஏன் என்னைப் பற்றி பிட் நோட்டீஸ் அடித்து வினியோகிக்கிறாய் என்று கண்டித்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது குருமாணிக்கம் சிவசங்கரனின் கை, தோள் பகுதியில் கடித்தார். இதில் சிவசங்கரன் காயம் அடைந்தார்.

இதையடுத்து அவர் தன்னைக் கடித்து காயப்படுத்தியவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் குருமாணிக்கத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+