கிரனைட் முறைகேடு: மதுரையில் 50 குவாரிகளின் உரிமம் ரத்து

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த கீழவளவு சுற்றுவட்டார கிராமங்களில் செயல்பட்டு வந்த கிரனைட் நிறுவனங்கள் , சட்ட விரோதமாக கிரனைட் கற்களை வெட்டி எடுத்ததாக புகார் எழுந்தது.இதனால் அரசுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.
இதையடுத்து பி.ஆர்.பி, சிந்து, உள்ளிட்ட இதில் தொடர்புடைய கிரனைட் நிறுவனங்கள் மீது விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பேரில், கடந்த நான்கு மாதமாக விசாரணை நடத்தப்பட்டு முதல் கட்டமாக 58 குவாரிகளில் விதிமீறல்கள் கண்டறிப்பட்டுள்ளது. இந்த குவாரிகளால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதும் தெரியவந்தது.
எனவே இந்த குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா பரிந்துரை செய்தார். அதன் பேரில், 16 கிரனைட் நிறுவனங்களின் 50 குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக கனிமவளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உரிமம் ரத்து செய்யப்பட்ட மதுரா கிரானைட், பெரியசாமி கிரானைட், பி.ஆர். கிரானைட், குமார் கிரானைட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications