விலங்கு கூட இப்படி நடந்து கொள்ளாது... டெல்லி பலாத்காரம் குறித்து அமிதாப் கருத்து
Subscribe to Oneindia Tamil

இதுதொடர்பாக டிவிட்டரில் அவர் கூறியுள்ள கருத்தில், டெல்லியில் ஓடும் பேருந்தில் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட செயல் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கோபமாக வருகிறது. ஒரு விலங்கு கூட இப்படி நடந்து கொள்ளாது.
இந்த சம்பவம் என்னை வெகுவாக பாதித்துள்ளது. நிறையப் பேச நினைத்தேன். ஆனால் பேச முடியாதபடி பாதிப்பை சந்தித்துள்ளேன் என்று வேதனை தெரிவித்துள்ளார் பச்சன்.
இந்த சம்பவம் குறித்து ராஜ்யசபாவில் பேசிய அமிதாப்பின் மனைவியும், சமாஜ்வாடி கட்சி எம்.பியுமான ஜெயா பச்சன் கண்ணீர் விட்டு அழுதார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications