டெல்லி மாணவியை சீரழித்தவனை அடித்து, சிறுநீரைக் குடிக்கச் செய்த திகார் கைதிகள்

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ படிப்பு படிக்கும் மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் சீரழித்து இரும்புக் கம்பியால் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே அவரை சீரழித்தவர்களில் பேருந்து ஓட்டுநர் ராம் சிங், அவரது சகோதரர் முகேஷ் சிங், வினய் சர்மா மற்றும் பவன் குப்தா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அதில் முகேஷ் சிங் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணுடன் இருந்த அவருடைய ஆண் நண்பர் நேற்று திஹார் சிறைக்கு வந்து முகேஷ் சிங்கை அடையாளம் காட்டினார்.
இதற்கிடையே திகார் சிறையில் உள்ள கைதிகள் முகேஷ் சிங்கை அடித்து நொறுக்கி அவரின் சிறுநீர் மற்றும் மலத்தை அவரை சாப்பிட வைத்துள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ளது. அந்த பெண் கற்பழிக்கப்பட்டபோது முகேஷ் தான் பேருந்தை ஓட்டியுள்ளார். பின்னர் தடையங்களை அழிக்க அவர்கள் அந்த பெண் மற்றும் அவருடன் இருந்த ஆண் நண்பரின் ஆடைகளை அவிழ்த்துவிட்டு பேருந்தில் இருந்து கீழே வீசிவிட்டனர்.












Click it and Unblock the Notifications