போர்க்களமான டெல்லி! அமெரிக்காவில் ஓய்வெடுத்த கவர்னர்! கடுப்பில் மத்திய அரசு!

டெல்லியைப் பொறுத்தவரையில் யூனியன் பிரதேசம் என்பதால் போலீசார் கவர்னருக்குத்தான் அறிக்கை அளிக்க வேண்டும். இந்நிலையில் டெல்லியில் நீதி கோரி மாணவர்கள் போர்க்கோலம் பூண்டிருக்க, கண்ணீர் புகை குண்டு வீச்சுகளும் தடியடிகளுமென தினமும் போர்க்களம்தான்!
ஒரு இடத்தில் மட்டுமெல்ல ..டெல்லி தெருக்கள் எல்லாம் போராட்டம்! ஆர்ப்பாட்டம்! ஆனால் டெல்லி யூனியன் பிரதேச அரசு அத்தனையையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது என்பதுதான் அதிர்ச்சி. டெல்லி கவர்னர் எங்கே இருக்கிறார் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று நாட்டின் உள்துறை அமைச்சர் சொல்லும் அளவுக்கு கேவலமான நிலை!
கடைசியில் அமெரிக்காவில் சொகுசாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்த கவர்னர் திஜேந்தர் கன்னாவை உடனே நாடு திரும்ப மத்திய அரசு உத்தரவிட்டது. இவ்வளவும் நடந்து முடிந்த பிறகு இன்று காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப் போகிறாராம் கவர்னர்!
எல்லாம் முடிந்த பிறகு எதுக்கு ஆலோசனை?












Click it and Unblock the Notifications