தீவிரமடையும் டெல்லி போராட்டம் - உள்துறை அமைச்சர் பதவி பறிப்பு?

டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்து உள்ளனர். மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து டெல்லியில் மாணவ-மாணவிகளும் மற்றும் பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் மிகவும் தீவிரமடைந்து வருகிறது. போராட்டத்தில் வன்முறையும் வெடித்து உள்ளது. இன்றும் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்த உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டே, மாணவி கற்பழிக்கப்பட்டது பற்றி நீதி விசாரணை நடத்தப்படும் என்றும், அரிதிலும் அரிதான பாலியல் பலாத்கார வழக்குகளில் மிகவும் கடுமையான தண்டனை வழங்குவதற்கான வழிமுறைகளை வகுக்க அரசு முயற்சி மேற்கொள்ளும் என்றும் கூறினார்.
ஆனால் அவரது பேட்டி போராட்டத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்து விட்டதாகவும், அவர் மீது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மிகுந்த அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால்தான் போராட்டக்காரர்களை நேற்று முன்தினமும், நேற்றும் சோனியா காந்தி சந்தித்து பேசி சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று போராட்டக்காரர்களுடன் சோனியா காந்தி பேசிய போது, உள்துறை ராஜாங்க மந்திரி ஆர்.பி.என்.சிங் அவருடன் இருந்தார். ஆனால் சுசில்குமார் ஷிண்டே இல்லை. அதிருப்தி காரணமாக அவரை சோனியா அழைக்கவில்லை என்று தெரிகிறது.
இந்த பிரச்சினையை ஷிண்டே கையாண்ட விதம் சோனியாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications