வன்முறை வேண்டாம்... என் மகளுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.. - பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை

Subscribe to Oneindia Tamil

Delhi Protest
டெல்லி: என் மகள் நலமடைய பிரார்த்தனை செய்யுங்கள்... அவருக்காக நடக்கும் போராட்டத்தில் வன்முறையைக் கைவிடுங்கள் என்று கற்பழிக்கப்பட்ட மாணவியின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெல்லியில், ஓடும் பஸ்சில் ஆறு நபர்களால் கொடூரமாக தாக்கி கற்பழிக்கப்பட்டு, சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவியின் தந்தை, நேற்றிரவு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார்.

அதில், "என் மகளின் உடல்நிலை தற்போது நிலையாக உள்ளது. அவர் சுய உணர்வுடன் இருக்கின்றார். என் மகளுக்கு நியாயம் கிடைப்பதற்காக போராட்டம் நடத்துபவர்களுக்கு நன்றி. ஆனால் இந்தப் போராட்டம் வன்முறையாக மாறுவதில் எங்களுக்கு உடன்பாடில்லை.

குற்றவாளிகளை கைதுசெய்து, சட்டத்தின் முன்நிறுத்தி, தண்டனை வாங்கித்தரும் போலீசாரின் முயற்சி வெற்றிபெற அனைவரும் உதவிட வேண்டும்.

உயிர் வாழவும், போராடவும் தேவையான மனதிடம் என் மகளுக்கு இன்னும் அப்படியே உள்ளது. அவள் நலமடைய கடவுளிடம் பிராத்தனை செய்யுங்கள். வன்முறையில் ஈடுபட வேண்டாம். நமது கோரிக்கையை நாம் அமைதியான முறையில் முன்னெடுத்துச் செல்வோம்.

என்மகள் எவ்வளவு தைரியமானவள் என்பதை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. உங்கள் அன்பும் ஆதரவும் அவள் மனதிடத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளது," என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+