இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை - தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

Subscribe to Oneindia Tamil

ஜெருசலேம்/சென்னை: உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸை முன்னிட்டு தேவாலயங்களில் இன்று சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.

கிறிஸ்தவர்களின் இறைவனான ஏசுநாதர் பிறந்தநாளை கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகிறார்கள்.
இந்த நாளை முன்னிட்டு கடந்த பல நாட்களாகவே கிறிஸ்தவர்களின் தேவாலயங்களிலும், வீடுகளிலும் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு, நட்சத்திரங்கள் தொங்கவிடப்பட்டுள்ளன. இதேபோல ஏசுநாதர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார் என்பதை குறிக்கும் விதமான குடில்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ தேவால்யாங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நாள் முழுவதும் நடக்கின்றன. நள்ளிரவு தொடங்கி, அதிகாலை மற்றும் நாள் முழுவதும் கோவில்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்படுகின்றன.

ஏசுநாதர் பிறந்த பெத்லேகமில் பல்லாயிரக்கணக்கானோர் கூடி வழிபாடு நடத்தினர் . வாடிகனிலும் சிறப்பு பிரார்த்தனைகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

சென்னை சாந்தோம் தேவாலயம், பெசன்ட்நகர் வேளாங்கண்ணி மாதா தேவாலயம் போன்றவை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கோலாகலமாக பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. மேலும் தேவாலயங்களில் மட்டுமின்றி பெரும் வணிக வளாகங்களிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் அரங்கேறின. நாகப்பட்டினம் வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில் வெளிநாடுகளில் இருந்து பலரும் கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்காக குவிந்திருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+