For Daily Alerts
Just In
பலாத்காரம் செய்தவர்களை தூக்கில் போடுங்கள்: பிரணாப் மகள் வற்புறுத்தல்!
பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கயவர்களுக்கு தூக்குதண்டனை அளிக்கவேண்டும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி கூறியுள்ளார்.
வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக நிறுவனர் பண்டிட் மதன்மோகன் மாளவியாவின் 150-வது பிறந்த நாள் விழாவில் ஜனாதிபதியின் மகளும் கதக் நடனக்கலைஞருமான ஷர்மிஸ்தா முகர்ஜி பங்கேற்றார். அப்போது அவர் டெல்லி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு தனது ஆழ்ந்த துயரத்தை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
எல்லா குற்றங்களுக்கும் மரண தண்டனை தீர்வாகாது. ஆனால், இந்த சம்பவம் அரிதிலும் அரிதானது. எனவே இந்த கொடூர செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனைக்கு குறையாத தண்டனை வழங்க வேண்டும் என்று ஷர்மிஸ்தா வற்புறுத்தினார்.
Comments
English summary
While President Pranab Mukherjee has been maintaining a stark silence over the turmoil in Delhi over gangrape case in a moving bus, his artist daughter Sharmistha Mukherjee has advocated for death penalty for the culprits.
Story first published: Wednesday, December 26, 2012, 10:57 [IST]