'காடுவெட்டி' குருவுக்கு கொலை மிரட்டல்: வி.சி. நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்காவில் கடந்த 24ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தர்மபுரி சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் காடுவெட்டி குருவுக்கு கொலை மிரட்டல் விடுத்தும், வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாகவும் அரியலூர் மாவட்ட பா.ம.க. செயலாளர் வைத்தி ஜெயங்கொண்டம் போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டப் பொருளாளர் இலக்கியதாசன், முன்னாள் மாவட்டச் செயலாளர் கொளஞ்சி என்கிற மாறன் ஆகியோர் மீது ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
ராமதாஸை கைது செய்யக் கோரி கரூர் அருகே ஆர்பாட்டம்:
இந் நிலையில் தர்மபுரி தலித்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை கைது செய்யக் கோரியும் கரூர் அருகே தலித் விடுதலை இயக்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
கரூர் அருகே உள்ளது அரவக்குறிச்சி. அங்கு தாலுகா அலுவலகம் முன்பு
தர்மபுரி சம்பவத்தை கண்டித்தும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை கைது செய்யக் கோரியும் கரூர் அருகே தலித் விடுதலை இயக்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்திற்கு தலித் விடுதலை இயக்க மாநில செயலாளர் ராஜகோபால் தலைமை வகித்தார். கொள்கைபரப்பு செயலாளர் ஆறுமுகம், பரமத்தி ஒன்றிய தலைவர் மணி, மாவட்ட மகளிரணி செயலாளர் சாந்தி பழனிச்சாமி, அரவக்குறிச்சி ஒன்றிய தலைவர் சின்னான் முன்னிலை வகித்தனர்.
பொதுச்செயலாளர் ஞானசேகரன், துணை பொதுச்செயலாளர் கருப்பையா, மாநில இளைஞரணி செயலாளர் சசிகுமார் உள்ளிட்டோர் பேசினர்.
அப்போது, தர்மபுரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீட்டு நிவாரணம் வழங்க வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் டாக்டர் ராமதாஸை கைது செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
இந்த ஆர்பாட்டத்தில், விடுதலை சிறுத்தைக் கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரன், ஒன்றிய செயலாளர் சுரேந்திரன், அமைப்பாளர் சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ராமசாமி, கிராம லட்சியம் அமைப்பு பொருளாளர் ஜெயசித்ரா, திருவள்ளவர் தமிழ் சங்க அமைப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications