மீண்டும் டெல்லியில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் பாலியல் சேட்டை- ஒருவர் கைது!
டெல்லி: ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பலியாகிப் போன அதிர்வலைகள் நீடிக்கும் நிலையில் மீண்டும் தலைநகர் டெல்லியில் இன்னொரு பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்த நபர் போலீசிடம் சிக்கியிருக்கிறார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்கந்த் கோஸ்வாமி, நேற்று மாலை நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்திருப்பதாகவும் அந்தப் பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் நீக்கப்பட்டு விசாரணைக்குள்ளாக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் அந்த பேருந்தின் உரிமையாளருக்கு எதிராகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே மும்பை ஜூஹூ கடற்கரையில் நேற்று மாலை 29-வயது கணவருடன் வந்த பெண் ரவுடி கும்பல் ஒன்றினால் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகியிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.












Click it and Unblock the Notifications