அலைமோதும் சுற்றுலா பயணிகளால் திணறும் பாபநாசம் அகஸ்தியர் அருவி
பாபநாசம்: அகஸ்தியர் அருவில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள களக்காடு-முண்டத்துறை புலிகள் காப்பக பகுதியில் ஏராளமான அருவிகள் உள்ளன. இதில் பல அருவிகளில் மழை காலங்களில் மட்டுமே தண்ணீர் விழும். சில அருவிகளில் சீசன் காலங்களில் மட்டுமே தண்ணீர் விழும். ஆனால் அகஸ்தியர் அருவியி்ல் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும். இதனால் இங்கு எப்போதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
இந்நிலையில் புலிகள் காப்பாக பகுதிகளில் சுற்றுலா மேற்கொள்ள கடந்த ஜூலை 24-ந் தேதி உச்சநீதிமன்றம் தடை விதித்தது. பின்னர் இத்தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து 5 மாத இடைவெளிக்கு பின்னர் கடந்த 7-ந் தேதி பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் அனுமதித்தனர்.
குற்றாலத்தில் சீசன் இல்லாததால் ஏராளமானோர் அகஸ்தியர் அருவிக்கு படையெடுக்கின்றனர். பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், ஞாயிற்றுகிழமை என்பதாலும் அகஸ்தியர் அருவியில்கூட்டம் அலைமோதியது. ஆனால் இங்கு சுற்றுலா பயணிகளுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. அருவி பகுதியில் உடை மாற்றுவதற்கு தனி இடம் இல்லாததால் பெண்கள் பெரும் சிரமத்தி்ற்கு உள்ளாகி வருகின்றனர். அருவியில் ஆண்கள், பெண்கள் குளிப்பதற்கு தடுப்பு சுவர் இல்லாத நிலை உள்ளது. இதனால் சில நேரங்களில் பெண்கள் பிரச்சனையை சந்தி்க்க வாய்ப்பு உள்ளது. எனவே வனத்துறையினர் கட்டுபாட்டில் உள்ள அகஸ்தியர் அருவியில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications