விஜயகாந்த் கூடத்தான் ஆசைப்பட்டார், ஆனால் 4 கேஸைக் கூட தாங்க முடியலையே.. அழகிரி

Subscribe to Oneindia Tamil

Azhagiri
மதுரை: முதல்வர் பதவிக்கு என்னை உட்கார வைத்து அழகு பார்க்க ஆசைப்பட்டனர். ஏன் விஜயகாந்த் கூடத்தான் ஆசைப்பட்டார். ஆனால் அவரால் நான்கு வழக்குகளைக் கூடத் தாங்க முடியலையே. எதுவாக இருந்தாலும் மக்கள் ஆசைப்பட்டால்தான் நடக்கும் என்று கூறியுள்ளார் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி.

மதுரையில் செய்தியாளர்களிடம் இன்று அழகிரி பேசுகையில்,

தமிழகம் தற்போது இருண்டு கிடக்கிறது. இருண்ட ஆட்சிதான் நடக்கிறது. ஓராண்டுக்குள் மின்சாரம் வரும் என்று வழக்கம்போல சொல்லி வருகிறார் முதல்வர். மத்திய அரசு தமிழக அரசின் வளர்ச்சி உதவவில்லை என்று ஜெயலலிதா கூறியதாக கேட்கிறீர்கள். திமுக ஆட்சியில் மத்திய அரசு என்ன உதவிகள் செய்ததோ, அதேபோலதான் இந்த அரசுக்கும் மத்திய அரசு செய்கிறது. ஆனால் ஜெயலலிதா அரசு இதனை அரசியல் சாயம் பூசி மறைக்கிறது என்றார் அவர்.

லோக்சபா தேர்தலில் அதிமுக தனித்து நிற்கும் என்றுஜெயலலிதா கூறியிருப்பது குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், அது அவர்களது கட்சி விருப்பம் என்றார் அழகிரி.

பிரதமர் பதவிக்கு ஜெயலலிதா ஆசைப்படுவதாக, முயற்சி செய்வதாக தெரிகிறதே என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், அது அவர்களுடைய விருப்பம். விஜயகாந்த் கூட முதல்வர் ஆக வேண்டும் என்று நினைத்தார். ஆனால் இந்த அரசு போட்ட 4 வழக்குகளை கூட அவரால் தாங்க முடியவில்லை. அன்னா ஹசாரே ஆசைப்பட்டார் ஆக முடியவில்லை.

என்னைக் கூட தான் முதல்வர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டனர். மக்கள் மனது வைத்தால்தான் எல்லாம் நடக்கும் என்றார் அழகிரி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+