நைஜீரியாவில் கொடூரம்: 15 கிறிஸ்தவர்கள் கழுத்து அறுத்து படுகொலை
Subscribe to Oneindia Tamil
அபுஜா: நைஜீரியாவில் 15 கிறிஸ்தவர்கள் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவில் மதச்சார்பற்ற அரசு பொறுப்பில் இருந்தாலும் முஸ்லிம்கள் வடக்கில், வடகிழக்கில் கிறிஸ்தவர்கள் அதிக அளவில் வசிக்கின்றன. ஆனால் நைஜீரியாவை ஒரு முஸ்லிம் நாடாக அறிவிக்கக் கோரி தொடர் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்தப் போராட்டத்தின் ஒருபகுதியாக அவ்வப்போது கிறிஸ்துவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படும்.
இதேபோல் மைடுகுரி நகர் அருகே கிராமம் ஒன்றுக்குள் புகுந்த தீவிரவாதக் குழுவினர் தாக்குதல் நடத்தியதுடன் 15 கிறிஸ்தவர்களின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பினர். இதைத் தொடர்ந்து அங்கு ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் படுகொலைக்கு போகோஹரம் என்ற தீவிரவாத அமைப்புதான் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications