பிரதீபா பாட்டீல் ரிடையராகியும் விதிகளை மீறி அவரது குடும்பத்தாரை பாதுகாக்க 19 போலீசார்

மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பிரதீபா பாட்டீல் கடந்த 2007ம் ஆண்டு ஜூன் மாதம் ஜனாதிபதியானபோது அவரது கணவர் தேவிசிங் செகாவத், மகன் ராஜேந்தர், மகள் ஜோதி, மருமகள் மஞ்சிரி, மருமகன் ஜெயேஷ், பேரன்கள் பிரித்வி, த்ருவேஷ், பேத்திகள் சௌரபி மற்றும் வேதிகா ஆகியோருக்கு பாதுகாப்பு அளி்க்குமாறு மத்திய அரசு மகாராஷ்டிரா அரசுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து பிரதீபா பாட்டீலின் கணவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு, மகன் மற்றும் மகளுக்கு ஒய் பிரிவு, மீதமுள்ள 6 பேருக்கு எக்ஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அதன்படி ஒரு எஸ்.ஐ. மற்றும் 18 கான்ஸ்டபிள்கள் பிரதீபா பாட்டீலின் குடும்பப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பிரதீபா ஜனாதிபதி பதவியில் இருந்து கடந்த ஜூலை மாதம் ஓய்வு பெற்ற பிறகு அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவரது குடும்பத்தாருக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு வாபஸ் பெறவில்லை. பிரதீபா பாட்டீலின் குடும்பத்தாருக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பை வாபஸ் பெற அனுமதி அளிக்குமாறு மகாராஷ்டிர அரசு உள்துறை அமைச்சகத்தை மூன்று முறை அணுகியும் பதில் கிடைக்கவில்லை.
மாநிலத்தில் உள்ள போலீசாரில் பலர் அரசியல் தலைவர்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால் சட்டம் ஒழுங்கை காக்க போலீசார் போதுமான அளவில் இல்லை என்று கூறப்படுகிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications