டூரிஸ்ட் விசாவில் வரும் வெளிநாட்டினர் செய்தி சேகரிக்கக் கூடாது: மத்திய அரசு எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர் இங்கு நடக்கும் நிகழ்ச்சிகள் குறித்து தகவல் சேகரிக்கக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்தியாவுக்கு சுற்றுலா விசாவில் வரும் வெளிநாட்டவர்கள் இங்கு நடக்கும் நிகழ்ச்சிகள் குறித்து செய்தி சேகரிப்பது எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. வெளிநாட்டவர்கள் சுற்றுலா விசாவில் வந்து நிருபர்கள் பணி செய்யக் கூடாது. எனவே, வெளிநாட்டவர்கள் சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் செய்தி சேகரிப்பதை தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.

மேலும் இந்த தகவலை வெளிநாடுகளில் இருக்கும் இந்திய அலுவலகங்களுக்கு தெரிவிக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சகத்தை கேட்டுக் கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+