உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாட தடை விதித்த நீதிபதி: ராமதாஸ் அதிர்ச்சி

நேற்று ஒரு வழக்கில் தமிழில் வாதாட அனுமதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் பாரி கோரிக்கை விடுத்தார். ஆனால், அந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிவக்குமார் அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார். இது குறித்து மேலும் பல வழக்கறிஞர்களும் சேர்ந்து விடுத்த கோரிக்கையையும் அவர் ஏற்க மறுத்தார். இந்த வழக்கை மேலும் தான் விசாரிக்க விரும்பவில்லை என்றும், வேறு நீதிபதிக்கு இதை மாற்றுமாறும் தலைமை நீதிபதிக்கு கோரிக்கை வைத்துவிட்டு, விசாரணையிலிருந்து விலகி விட்டார்.
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதிடலாம் என வாய்மொழியாக அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் போதிலும், தமிழில் வாதிடுவதற்கான உரிமை வழக்கறிஞர் ஒருவருக்கு நேற்று மறுக்கப்பட்டிருக்கிறது. தமிழ் மொழியே தெரியாத நீதிபதி எம்.ஒய்.இக்பால் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தபோது, வழக்கறிஞர்களின் உணர்வுகளை மதித்து தமிழ் மொழியில் வாதிடலாம் என அனுமதி அறித்த நிலையில் தமிழ் மொழி தெரிந்த நீதிபதி ஒருவர் தமிழில் வாதிடுவதற்கு தடை விதித்திருப்பது தான் அதிர்ச்சி அளிக்கிறது.
தாய்மொழியில் வாதங்களை முன்வைக்கும் போது அது தெளிவாகவும், வலிமையாகவும் இருக்கும் என்ற அடிப்படையில் தான் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதிட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்படுகிறது.
உயர் நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழிகளில் நீதிமன்ற நடவடிக்கைகள் அமைவதை இந்திய அரசியல் சட்டமும் அனுமதிக்கிறது.
உத்தரப் பிரதேசம், பிகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அம்மாநில மொழிகள், குடியரசுத் தலைவரின் ஆணைப்படி உய ர்நீதிமன்ற வழக்கு மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு இருக்கும் போது சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க மத்திய அரசு ஏன் தயங்குகிறது என்பது தெரியவில்லை.
ஒரு மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் அம்மாநிலத்தின் தாய் மொழியில் வாதிடுவதற்கு அரசியல் சட்டம், மரபு, நடைமுறை என எந்த பெயரால் தடை விதிக்கப்பட்டாலும் அதைவிட பெரிய மோசடி இருக்க முடியாது. எனவே சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இதற்காக மத்திய அரசுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு நெருக்கடி தர வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம்












Click it and Unblock the Notifications