Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கல்வியாளர் எஸ்.ஏ. ராஜா மரணம்- ஆலடி அருணா கொலை வழக்கில் சிக்கியவர்

Subscribe to Oneindia Tamil

SA Raja
நெல்லை: பிரபல கல்வியாளர் எஸ்.ஏ. ராஜா உடல் நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை மரணம் அடைந்தார்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள வடக்கன்குளத்தைச் சேர்ந்தவர் எஸ்.ஏ. ராஜா. ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் இப்பகுதியில் பொறியியில் கல்லூரி, மருத்துவக் கல்லூரி உள்பட பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வந்தார். 76 வயதான அவர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 2.30 மணிக்கு மரணம் அடைந்தார்.

அவருக்கு சோபியா என்ற மனைவியும், 4 மகன்கள், 1 மகள் உள்ளனர். முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் ராஜாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து எஸ்.ஏ.ராஜா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராஜாவுக்கு எதிரான ஆதாரங்கள் போதுமானவையாக இல்லை என்று கூறி அவரை விடுதலை செய்து கடந்த 2010ம் ஆண்டு ஜூலை மாதம் 30ம் தேதி உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+