கர்நாடகா: பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டால் ஆதரவு- கவுடா அறிவிப்பு

பாரதிய ஜனதா கட்சியிலிருந்து பிரிந்து கர்நாடகா ஜனதா கட்சியை எதியூரப்பா தொடங்கியுள்ளார். அவர் தமது ஆதரவில்தான் கர்நாடகா பாஜக ஆட்சி நடைபெறுவதாகவும் கூறிவருகிறார். இந்த நிலையில் கர்நாடகா அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் நிச்சயமாக அதை மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரிக்கும் என்று தேவ கவுடா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், பாரதிய ஜனதாவுக்கு சிக்கல் ஏற்பட்டால் அக்கட்சியைக் காப்பாற்றி கூட்டணி ஆட்சி அமைக்க மதச்சார்பற்ற ஜனதா தளம் முயற்சிக்காது. காங்கிரஸ் கட்சி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தால் சட்டசபையில் அதனை ஆதரிப்போம். ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற வகையில் காங்கிரஸ் கட்சி, ஆளும் கட்சியின் ஊழல்களை அம்லப்படுத்த தவறிவிட்டது.
மதச்சார்பற்ற ஜனதா தளம் மூன்றாவது அணியை அமைக்க முயற்சிக்காது. எனக்கு வயதாகிவிட்டதும் ஒரு காரணம். அப்படி அமைக்கப்படுகிற அணியில் கருத்து ஒற்றுமை நீடிப்பதும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications