மும்பை மதுபான விடுதியில் மூவர் படுகொலை
மும்பை: மும்பையில் மதுபான விடுதி ஒன்றில் இன்று அதிகாலையில் மூன்று சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மும்பையில் வித்யா விகார் ரெயில் நிலையம் அருகில் உள்ளது நடராஜ் ஹோட்டல். இங்குள்ள மதுபான விடுதியில் பணியாற்றிய காவலாளி, துப்புரவு தொழிலாளி மற்றும் வெயிட்டர் ஆகியோர் இன்று காலையில் சடலமாகக் கிடந்தனர்
அவர்களின் உடலில் பல இடங்களில் கூர்மையான ஆயுதங்களால் வெட்டப்பட்டு இருந்தது. மூன்று பேரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக்க் கிடந்தனர்.
இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை 2.30 மணிக்குப் பிறகு அங்குள்ள கண்காணிப்பு கேமரா சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. எனவே கொள்ளையர்கள் கைவரிசையாக இருக்க வாய்ப்பில்லை என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.
விடுதியின் உள்ளே மது அருந்தியவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
கொலையானவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே கூடுதல் தகவல் கிடைக்கும் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications