ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு!ராமதாஸ் மற்றும் 'சாதி' தலைவர்கள் நுழைய தடை!

ராமநாதபுரம், பரமக்குடி நகராட்சி பகுதியில் தேவர் குருபூஜையையட்டி நடந்த வன்முறை காரணமாக கடந்த நவம்பர் 1-ந் தேதி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இத்தடை கடந்த 2 மாத காலம் அமலில் இருந்தது. கடந்த 1-ந் தேதிதான் இந்த 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் ராமதாஸ் தலைமையில் அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை அமைப்பு கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை முறை கேடாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று கோரி இந்த கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் மீண்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ராமநாதபுரத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவையின் கலந்தாய்வு கூட்டத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. சாதி மோதல்கள், கலவரம் போன்ற பதற்றமான சூழ்நிலை உருவாகாமல் இருப்பதற்காக மேற்கண்ட அமைப்பில் உள்ள அனைத்து கட்சியினர் மற்றும் அமைப்பினர்களும் ராமநாதபுரம் மாவட்டத்துக்குள் நுழையவும் நிகழ்ச்சிகள் நடத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications