கூடங்குளம் இயக்குநருக்கு கொலை மிரட்டல் கடிதம்? - உதயகுமார் மறுப்பு!
Subscribe to Oneindia Tamil

அணுமின்நிலைய இயக்குநர் ஆர்.எஸ். சுந்தரின் முகவரிக்குஅனுப்பப்பட்ட மிரட்டல் கடிதத்தில் கூடங்குளம் அணு உலையைத் துவக்கினால், உன்னைக் கொன்று விடுவோம் என்று கூறப்பட்டிருந்தது. உடனடியாக சுந்தர் இது குறித்து உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறைக்கு புகார் அளித்தார்.
தமிழில் எழுதப்பட்டிருந்த அந்த கடிதத்தல் முடிவில் கூடங்குளம் மக்கள் நண்பன் என்று கையெழுத்து இடப்பட்டிருந்தது. சென்னை அண்ணா சாலையில் இருந்து அந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால் இந்தக் கடிதத்துக்கும் தங்களது போராட்டக் குழுவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தங்கள் மீது பழிபோடவே இக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதன் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications