நாட்டின் பலாத்கார சம்பவங்களுக்கு பீகாரிகளே காரணம்: ராஜ்தாக்கரே புது குண்டு
மும்பை: நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு பீகாரிகளே காரணம் என்று மீண்டும் வம்புக்கு இழுத்திருக்கிறார் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரே.
பீகாரிகளுக்கு எதிராக தொடர்ந்து கருத்துகளைத் தெரிவித்தும் வன்முறைகளைத் தூண்டிவிட்டும் வருபவர் மகராஷ்டிரா நவநிர்மான் சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரே. தற்போது நாடு முழுவதும் பலாத்கார சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வருவதும் அதற்கான நீதி கேட்கும் போராட்டங்களும் தொடர் கதையாகி வருகின்றன.
இந்த நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் ராஜ்தாக்கரே கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்.
"நாட்டில் ஒவ்வொருத்தரும் பாலியல் பலாத்கார சம்பவம் பற்றித்தான் பேசுகின்றனர். ஆனால் யார் இதைச் செய்வது என்பது பற்றி பேசுவதில்லை. பீகாரிகளுக்கு எதிராக பேசியதற்காக என் மீது பல வழக்குகள் போடப்பட்டன. ஆனால் இந்த பாலியல் பலாத்கார செயல்களில் ஈடுபடுகிறவர்கள் அனைவருமே பீகாரிகள் என்பதைப் பற்றி யாரும் ஏன் பேசவில்லை " என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் ராஜ்தாக்கரே.
அடுத்த களேபரத்துக்கு விதை போட்டுவிட்டார் ராஜ்தாக்கரே!












Click it and Unblock the Notifications