19 வயதிலேயே வாழ்க்கையை வெறுத்த வாலிபர் .. டிஆர்ஓவிடம் மனு கொடுத்து புலம்பல்
கமுதி: நிலத்தகராறு காரணமாக தனது குடும்பத்தை கிராமத்தை ஒதுக்கி வைத்து விட்டனர். இதனால் வாழப் பிடிக்கவில்லை என்று கூறி மாவட்ட வருவாய் அதிகாரியிடம் 19 வயது வாலிபர் புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வெள்ளையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் காளித்துரை. 19 வயதான இவர் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு ஒன்றைக் கொடுத்தார்.
அதில், நிலத்தகராறு காரணமாக எனது குடும்பத்தை 2 வருடத்துக்கு முன்பு கிராமத்தை விட்டு தள்ளி வைத்து விட்டனர். இதனால் எனக்கு வாழப் பிடிக்கவில்லை என்று கூறியிருந்தார்.
மேலும் கையோடு கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீவைத்துக் கொள்ளவும் முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த போலீஸார் காளித்துரையை தடுத்து நிறுத்தி காவல் நிலையம் கூட்டிச் சென்று அமர வைத்து விசாரித்தனர்.












Click it and Unblock the Notifications