Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெறும் ரூ.160 மதிப்புள்ள பொங்கல் பரிசுக்காக மக்களை கையேந்த வைப்பது அவமானம்: ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

Ramadoss
சென்னை: தமிழகத்தில் தனி நபர் வருமானத்தை ஆண்டுக்கு 5.5 லட்சமாகவும், 4 பேர் கொண்ட குடும்பத்தின் ஆண்டு வருமானத்தை ரூ.22 லட்சமாகவும் உயர்த்தப் போவதாக உறுதி அளித்த முதல்வர் ஜெயலலிதா, வெறும் ரூ.160 மதிப்புள்ள பொங்கல் பரிசுக்காக மக்களை கையேந்த வைத்திருப்பது அவமானகரமானதாகும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர் திருநாளான பொங்கல் திருநாளையொட்டி தமிழகத்தில் உள்ள 1.84 குடும்பங்களுக்கு ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.100 அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.

ரூபாய்க்கு 3 படி அரிசி தருவதாக வாக்குறுதி அளித்து 1967ல் ஆட்சியைப் பிடித்த திராவிடக் கட்சிகள், ஒருபுறம் மக்களை முன்னேற்றுவதாகக் கூறிக்கொண்டு, இலவசங்களைக் கொடுத்து மக்களைச் சீரழித்து வருகின்றன.

கடந்த ஆண்டு வெளியிட்ட 'தொலைநோக்குத் திட்டம்- 2023' அறிக்கையில் தமிழகத்தில் தனி நபர் வருமானத்தை ஆண்டுக்கு 5.5 லட்சமாகவும், 4 பேர் கொண்ட குடும்பத்தின் ஆண்டு வருமானத்தை ரூ.22 லட்சமாகவும் உயர்த்தப் போவதாக உறுதி அளித்த முதலமைச்சர், அடுத்த ஆண்டிலேயே வெறும் ரூ.160 மதிப்புள்ள பொங்கல் பரிசுக்காக மக்களை கையேந்த வைத்திருப்பது அவமானகரமானதாகும்.

இத்திட்டத்திற்காக செலவிடப்படும் ரூ.300 கோடியை பயன்படுத்தி சமச்சீர் கல்வித் திட்டத்தை மிகச்சிறப்பாக செயல்படுத்தலாம் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+