கண் பார்வையில் பாதிப்பு... அப்துல் நாசர் மதானி மருத்துவமனையில் அனுமதி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கண் பார்வையில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பு காரணமாக பெங்களூர் குண்டுவெடிப்புக் கைதி அப்துல் நசார் மதானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி பல காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கேரளாவைச் சேர்ந்த மதானி பின்னர் விடுதலையானார். ஆனால் 2008ம் ஆண்டு ஜூலை மாதம் பெங்களூரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு பெங்களூர் கொண்டு செல்லப்பட்டார்.

தொடர்ந்து சிறைக் காவலில் இருந்து வரும் அவருக்கு சர்க்கரை வியாதி காரணமாக கண் பார்வை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க கோர்ட் அனுமதித்துள்ளது. அதன்படி அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பெங்களூர் ஒயிட்பீல்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடன் அவரது மனைவி, மகன் உடன் இருக்கவும் கோர்ட் அனுமதி தரப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+