ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: 571 கேள்விகளில் 250க்கு 'தெரியாது' என்று பதிலளித்த இளவரசி

பணம் குறித்த 250 கேள்விகளுக்கு தெரியாது என்று பதில் அளித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் ஜெயலலிதாவும், சசிகலாவும் ஆஜராகி பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கில் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜரான இளவரசி 211 கேள்விகளுக்கு பதில் அளித்தார். நேற்று மீண்டும் ஆஜரான அவர் 360 கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவரிடம் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் ஆகியோரின் வங்கி கணக்களுக்கு வந்த பணம், காசோலை வழங்கல் மற்றும் பணம் எடுத்தது குறித்து 250 கேள்விகள் கேட்கப்பட்டது. பணம் சம்பந்தப்பட்ட 250 கேள்விகளுக்குமே தெரியாது என்று பதில் அளித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
கொடநாடு எஸ்டேட் மற்றும் குணபூசனியில் நான் பங்குதாரராக உள்ளேன். இதன் மூலம் வங்கியில் ரூ.3.85 கோடி கடன் கேட்டு மனு கொடுத்தது உண்மை. மன்னார்குடி இந்தியன் வங்கியில் என் பெயர், என் மகன் விவேக், கிருஷ்ணபிரியா, ஷகிலா ஆகியோரின் பெயர்களில் பணம் போட்டிருப்பது உண்மை.
போயஸ் கார்டனில் நானும், என் மகன் விவேக்கும் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், அவர் மனைவி சத்யலட்சுமியுடன் வசித்ததாகக் கூறும் ஜெயராமனை நான் அங்கு பார்த்ததே இல்லை. எனது வாக்காளர் அட்டையில் நான் கடந்த 1988ம் ஆண்டு போயஸ் கார்டனில் வசித்ததாக கூறுவது முறையன்று. சொல்லப் போனால் 1988ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் என் பெயரே இல்லை.
நமது எம்.ஜி.ஆர்., சசி என்டர்பிரைசஸ், லெட்ஸ் பிராப்பர்ட்டி, மெடோ அக்ரோ பார்ம், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், ஜெயா பப்ளிகேஷன், ரிவர்வே அக்ரோ புராடெக்ட்ஸ், ஜெ. பார்ம் ஹவுஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் இருந்து ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் வங்கிக் கணக்குகளுக்கு லட்சக் கணக்கில் பணப் பரிவர்த்தனை நடந்தது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications